நிழற்குடை விமர்சனம்

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில், ஜோதி சிவா தயாரிப்பில், சிவா ஆறுமுகம் இயக்கத்தில், தேவயானி, விஜித், கண்மணி, இளவரசு, ராஜ்கபூர், மனோஜ்குமார், வடிவுக்கரசி, நீலிமாஇசை, தர்ஷன் சிவா, குழந்தைகள் நிஹாரிகா, அஹானா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் நிழற்குடை.

ஐடி நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் இருக்கும் கண்மணியும் விஜித்தும் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு விழா என்று அழகான பெண் குழந்தை இருக்கிறது.

குழந்தை நிலாவை பார்த்துக் கொள்ள ஒரு பெண் நியமிக்கப்படுகிறார் அந்தப் பெண் குழந்தை கவனித்துக் கொள்ளாமல் தன் காதலி வர வைத்து அவர்கள் வீட்டில் உல்லாசமாக இருக்கிறார். இந்த விஷயம் கண்மணிக்கும் விஜித்துக்கும் தெரிய வர அந்த பெண்ணை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விடுகின்றனர். 

பிறகு இருவரும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து குழந்தையை பார்த்துக் கொள்கிறார்கள். இந்த சமயத்தில் குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக ஒரு முதியோர் இல்லத்திற்கு செல்கின்றனர்.

அங்கு தேவயானியை பார்க்கின்றனர் தேவயானி தங்கள் குழந்தையை பார்த்துக் கொண்டாள் நன்றாக இருக்கும் என்று கூறி அவரை தங்கள் வீட்டுக்கு வரும்படி கேட்கின்றனர். 

தேவயானிக்கும் அந்த குழந்தையை பிடித்து விட அந்த குழந்தை தன் குழந்தையை போல் இருப்பதால் அதற்கு சம்மதம் தெரிவித்து அந்த குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக அவர்கள் வீட்டுக்கு செல்கிறார். 

தேவயானி அந்த குழந்தையை மிகுந்த அக்கறையுடன் அன்பாகவும் பார்த்துக் கொள்கிறார். இதனால் அந்த குழந்தையும் அவரிடம் மிகுந்த பாசத்தோடு இருக்கிறது. 

இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் சென்டர் செட்டிலாக முயற்சித்துக் கொண்டிருக்கும் விஜித்துக்கும் கண்மணிக்கும் விசா கிடைக்க அவர்கள் அமெரிக்கா போக முடிவு செய்கிறார்கள். 

அமெரிக்கா சென்று விட்டால் குழந்தையை பிரிய வேண்டும் என்று நினைத்து தேவயானி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். 

இந்த சூழ்நிலையில், குழந்தை திடீரென்று காணாமல் போகிறது, தங்கள் அமெரிக்கா போவதை தடுப்பதற்காக குழந்தையை கடத்தி இருக்கலாம் என்று விஜித்தும் கண்மணியும் ஒரு சிலர் மீது புகார் அளிக்கிறார்கள் காவல் நிலையத்தில். 

விசாரணையை ஆரம்பிக்கிறார் காவல்துறை அதிகாரியாக வரும் இளவரசு, குழந்தையை கண்டுபிடித்தார்களா? இல்லையா? குழந்தையை யார் கடத்தினார்கள்? விஜித்தும், கண்மணியும் அமெரிக்கா சென்றார்களா? இல்லையா? தேவயானி அந்த குழந்தையை பிரிந்தாரா? இல்லையா? என்பதே நிழற்குடை படத்தோட மீதிக்கதை.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பு: தர்ஷன் பிலிம்ஸ் சார்பில், ஜோதி சிவா

இயக்கம் : சிவா ஆறுமுகம்

இசை : நரேன் பாலகுமார்

கலை இயக்கம் : விஜய் ஆனந்த்

படத்தொகுப்பு : ரோலக்ஸ்

ஒளிப்பதிவு : ஆர் பி குருதேவ்

மக்கள் தொடர்பு : ஏ.ஜான்