ஆட்டோ மீது லாரி மோதி கர்நாடகாவில் 11 பேர் பலி

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ராம்பூர் என்ற இடத்தில் ஆட்டோ மீது லாரி மோதியது. சம்பவ இடத்தில் 11 பேர் பலியானார்கள். 20 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.