மையல் விமர்சனம்

ஏபிஜி ஏழுமலை இயக்கத்தில் சேது, சம்ரிதி தாரா, பி எல் தேனப்பன், லேட் சூப்பர் குட் சுப்ரமணி, ரத்னகலா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் “மையல்”.

ஒருநாள் இரவில் நாயகன் சேது ஆட்டை திருடிவிட்டு, ஓடுகிறான். மற்றொரு புறம், இரண்டு பேர் சேர்ந்து வயதான தம்பதியினரை வெட்டிக் கொலை செய்கின்றனர்.

ஆடு திருடிவிட்டு, மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக தப்பித்து செல்லும்போது அங்கிருந்த கிணற்றுக்குள் தவறி விழுகிறார் சேது. அப்பொழுது கால் முறிவு ஏற்படுகிறது.

நாயகி சம்ரிதி சேதுவை காப்பாற்றி அடைக்கலம் கொடுக்கிறார். சம்ரிதி ஒற்றை குடிசையில் ஊருக்கு வெளியே பாட்டியோடு வாழ்ந்து வருகிறார். சம்ரிதியின் பாட்டி மாந்திரீக வேலை செய்வதில் வல்லவராக இருக்கிறார்.

சேதுவைத் தேடி சிலர் அழைந்து கொண்டிருக்க, பாதுகாப்பிற்காக சம்ரிதாவின் வீட்டிலேயே சில நாட்கள் தங்குகிறார். அந்த நாட்களில் சேதுவிற்கும் சம்ரிதாவிற்கும் காதல் ஏற்படுகிறது. 

இவர்களின் காதல் பிடிக்காததால் சம்ரிதாவின் பாட்டி, சேதுவை அங்கிருந்து அனுப்பி வைத்து விடுகிறார்.

சேதுவும் அவர் ஊருக்கு வந்து விடுகிறார். அதே நேரத்தில், முதியவர்களை கொன்றது யார் போலீஸ் தேடி வருகிறது. அவர்களை போலிஸ் கண்டுபிடித்ததா? இல்லையா? சேது, சம்ரிதியின் காதல் என்னவானது? என்பதே மையல் படத்தோட மீதிக் கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்குனர் : ஏபிஜி. ஏழுமலை

தயாரிப்பு : ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி

தயாரிப்பாளர்கள் : அனுபமா விக்ரம் சிங் மற்றும் வேணுகோபால்.ஆர்

கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுத்து : ஜெயமோகன்

இசை : அமர்கீத்.எஸ்

ஒளிப்பதிவு : பாலா பழனியப்பன்

எடிட்டர் : வெற்றி சண்முகம்

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா மற்றும் அப்துல் நாசர்