பொன்னமராவதியில் அரசு பள்ளி மாணவன் கடத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவன் தயாலன் என்ற விஜய் (17) காலை பள்ளிக்கு செல்லும் போது பொன்னமராவதி பட்டமரத்தான் கோவில் முன்பு கடத்தல்.

போலீஸ் விசாரணையில் மாணவன் பொன்னமராவதி அண்ணாசாலை பகுதி எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வரும் கேசவன் நீலா என்பவர்களின் மூத்த மகன் தயாலன்  விஜய் என்பதும். மாணவனை காலை 8 மணிக்கு அலைபேசியில் விரைவில் கிளம்பி வா என்றும் பட்டமரத்தான் பகுதி வழியாக வலம்புரி வடுகநாதன் பள்ளிக்கு செல்லும் போது மர்ம நபர்கள் கடத்தி சென்றதாகவும், கடத்தல் காரர்கள் கடத்திய மாணவனை வைத்து பெற்றோருடன் தான் கடத்தப்பட்டேன் என்று பேசியதும் தெரியவந்தது. இதையடுத்து மாணவனின் பெற்றோர் நீலா பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். பொன்னமராவதி போலீஸ் கடத்திய மாணவன் எந்த ரூபத்தில் கடத்தப்பட்டான் என்று உதவி ஆய்வாளர் பிரபாகரன் விசாரனை செய்து வருகின்றனர்…