ஆறுமுக குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, ருக்மணி, யோகிபாபு, பப்லு ப்ரித்விராஜ், திவ்யா, அவினாஷ், ராஜ்குமார் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ”ஏஸ்”.
சிறையில் இருந்து வெளிவரும் விஜய் சேதுபதி, இந்தியாவில் இருந்த தன்னுடைய அடையாளத்தை மறைத்து விட்டு புதிதாக ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு மலேசியா செல்கிறார்.
அங்கு இருக்கும் யோகி பாபு தனக்கு அறிமுகமாகும், விஜய் சேதுபதியை தனக்கு தெரிந்த பெண்ணான திவ்யா பிள்ளையின் ஹோட்டலில் வேலைக்கு சேர்த்துவிடுகிறார். யோகி பாபு வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்கிறார்.
அவர் வீட்டிற்கு எதிரில் வீட்டில் இருக்கும் ருக்மணியை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் விஜய் சேதுபதி.
காதலியான ருக்மணிக்கு பணம் தேவைப்படுகிறது. அதற்காக அவிநாஷ் என்கிற தாதாவிடம் கடன் வாங்க செல்லும் இடத்தில் ஏஸ் என்கிற சூதாட்டத்தை விளையாடி ஒரு கோடி ரூபாய்க்கு கடனாளியாகிறார்.
ஒரு வாரத்தில் கடனை திருப்பித் தரவில்லை என்றால் உயிர் போய்விடும் என்று அவினாஷ் யோகி பாபு விஜய் சேதுபதி இருவரையும் மிரட்டி அனுப்புகிறார்.
பணத்திற்காக வங்கியை கொள்ளையடிக்க விஜய் சேதுபதி முடிவெடுக்கிறார். விஜய் சேதுபதியின் திட்டம் ஜெயித்ததா? இல்லையா? ருக்மணியின் பண தேவையை பூர்த்தி செய்தாரா? இல்லையா? அவிநாஷின் கடனையும் அடைத்தாரா? இல்லையா? என்பதே ஏஸ் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு நிறுவனம் : 7 சி எஸ் என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பாளர் : ஆறுமுககுமார்
எழுத்து – இயக்கம் : ஆறுமுககுமார்
ஒளிப்பதிவு : கரண் B ராவத்
பாடல்கள் : ஜஸ்டின் பிரபாகர்
பின்னணி இசை : சாம் சி எஸ்
படதொகுப்பு : ஃபென்னி ஆலிவர்
நடனம் : ராஜு சுந்தரம், லீைாவதி
ஸ்டண்ட் (இந்தியா) : தினேஷ் சுப்புராயன், டான் அசோக்
ஸ்டண்ட் (மலேசியா) : ரிக்கி, ஜேம்ஸ் சுங்
கலை : ஏ.கே முத்து
பாடல் வரிகள் : தாமரை, ரட்டி, வெட்டிப் பையன் வெங்கட்
தயாரிப்பு நிர்வாகி : எம்.கே.சாயிசுந்தர்
மக்கள் தொடர்பு : யுவராஜ்