வி ஜி சினி புரோடஷ்சன் நா வெங்கடேசன் தயாரிப்பில், எஸ் ஆர் மணிகண்டன் இயக்கும் விசாரணை கைதி

வி ஜி சினி புரோடஷ்சன் நா வெங்கடேசன் தயாரிககும் படம் தான் விசாரணை கைதி. கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் எஸ் ஆர் மணிகண்டன், கதாநாயகன் உன்னி கிருஷ்ணன், கதாநாயகி வைஷ்ணவி, முக்கிய கதாபாத்திரத்தில் கூல் சுரேஷ் இந்தப் படத்திற்கு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 
விகடன் ரித்விகாஸ்ரேயா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். கேமராமேன் சந்திரன் சாமி. இசை அமைப்பாளர் நரேஷ் பைட் மாஸ்டர் அசால்ட் மதுர இந்தப் படத்தில் நடித்த எல்லா கலைஞர்களும் பணிபுரிந்த எல்லா டெக்னீஷும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள் இந்த படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.
 
டைரக்டர் சொல்ல வருவது இந்த விசாரணை கைதி என்ற ஒரு கதையைக் கொண்டு எத்தனையோ தயாரிப்பாளரை சந்தித்தேன் கடைசியில் என் கதையைக் கேட்டு ரொம்ப நல்லா இருக்கு இந்த கதை
என்று சொன்னவர் நா வெங்கடேசன் தயாரிப்பாளர் உடனே சூட்டிங் வேலைகளை தொடங்குங்க என்று சொல்லி எனக்கு அட்வான்ஸ் கொடுத்தார். 
 
இந்தப் படத்திற்கு கதாநாயகன் கதாநாயகி மற்றும் கேரக்டர் ஆர்டிஸ்ட் எல்லாம் மிகச் சிறப்பாக தேர்வு செய்து இந்தப் படத்தை எப்படி எல்லாம் ஷூட் பண்ணலாம் என்று நல்ல லொகேஷன்களை தேர்வு செய்தேன். நான் எதிர்பார்த்தபடியே இந்த படத்தை எடுக்க தயாரிப்பாளர் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த படம் நான் நினைத்த மாதிரி மிகச் சிறப்பாக எடுத்து முடித்திருக்கிறேன்.
 
தயாரிப்பாளர் நா வெங்கடேசன் இந்தப் படத்தைப் பற்றி சொல்ல வருவது நான் எத்தனையோ கதைகளை கேட்டேன் அது எனக்கு பிடிக்கவில்லை. டைரக்டர் எஸ் ஆர் மணிகண்டன் சொன்ன இந்த கதை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது இதற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று டைரக்டரிடம் நான் கேட்டேன் இந்த தலைப்பு வைப்பதற்கே கிட்டதட்ட மூன்று மாத காலங்கள் தேவைப்பட்டது அதன் பிறகு தான் இந்த டைட்டில் எங்களுக்குள்ள அமைந்தது அந்த டைட்டில் தான் விசாரணை கைதி கதையை கேட்ட உடனே இந்த டைட்டில் பொருத்தமாக எங்களுக்கு இது அமைஞ்சது மற்றும் இந்த படம் நல்ல அருமையா வந்திருக்கு. டைரக்டர் என்னிடம் கதை சொன்னபடியே இந்த படம் எடுத்துக் கொடுத்திருக்கிறார்.
 
கதாநாயகன் உன்னிகிருஷ்ணன் டைரக்டர் என்னிடம் வந்து இந்த கதையை சொன்ன உடனே எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. உடனே இந்த படம் பண்ண வேண்டும் என்று முடிவு செய்தேன். நன்றாக என்னை இந்த படத்தில் மிகச் சிறப்பாக என் கேரக்டரை உருவாக்கி என்னை அருமையாக நடிக்க வைத்திருக்கிறார் டைரக்டர்.
 
கதாநாயகி வைஷ்ணவி, டைரக்டர் என்னை தேர்வு செய்து கதை சொன்னார் கதை கேட்ட உடனே என் கதாபாத்திரம் மிகச் சிறப்பாக இருந்தது உடனே நடிக்க முடிவு செய்தேன்.
 
கேமராமேன் சந்திரன் சாமி, டைரக்டர் என்னிடம் வந்து இந்த கதை சொன்ன உடனே வித்தியாசமான ஒரு கதையா இது இருக்கு என்று சொனனேன். இந்த படத்தில் ஒளிப்பதிவு காட்சிகள் மிகச் சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறேன்.
 
இசையமைப்பாளர் நரேஷ், டைரக்டர் என்னிடம் கதை சொன்ன உடனே மிகச் சிறப்பாக இந்த படத்திற்கு பாடல்கள் அமைந்தது பின்னணி இசை அமைந்தது.
 
டைரக்டர் இந்த படத்தின் பற்றி கதை சொல்ல வருவது ஒரு சிறிய கிராமத்தில் காவல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் நாயகன் உன்னிகிருஷ்ணன். அந்த கிராமத்தில் தொடர்ச்சியாக மர்ம கொலைகள் நடைபெற்று வருகிறது. மக்கள் அதிர்ச்சியில் வாழ்கின்றனர். விசாரணை தீவிரமாக நடைபெறும் நிலையில் அவருடன் பணிபுரியும் காவலரும் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலைகளை செய்வது யார்? இதற்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன? என்பதையே மையமாகக் கொண்டு நகர்கிறது.  
 
படத்தில் கதாநாயகி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் அருமையாக வந்திருக்கிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடிகர் கூல் சுரேஷ் இதுவரையும் நடிக்காத ஒரு தோற்றத்தில் இந்த படத்தில் நடித்து அசத்திருக்கிறார்.
 
முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் விகடன் மிகச் சிறப்பாகவும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்து இந்த படத்தை எடுக்க உதவி செய்தார்கள்.
 
இந்தப் படம் தமிழ்நாடு முழுவதும் நல்ல லொகேஷன்களை தேர்வு செய்து படப்பிடிப்பை நடத்தினோம். விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இவ்வாறு டைரக்டர் எஸ் ஆர் மணிகண்டன் கூறுகிறார்.