முன்னாள் ஜனாதிபதி மறைவு திரு.பிரணாப் முகர்ஜி – பத்திரிக்கையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல்

முன்னாள் ஜனாதிபதி திரு.பிரணாப் முகர்ஜியின் மறைவிற்கு தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல்

முன்னாள் ஜனாதிபதியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு.பிரணாப் முகர்ஜி-யின் மறைவு ஈடு இணையற்றது. ஜனாதிபதியாக தனது பணியை திறம்பட செய்தவர். அவரது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கும், இந்திய நாட்டிற்கும் பேரிழப்பாகும். நேர்மை மற்றும் அன்பிற்காக மக்கள் மனதில் என்றும் நிற்பவர். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திரனருக்கு தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

G. நாகராஜன்,

மாநில தலைவர்,

தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றம்.