திருச்செந்தூர் முருகன் கோவில் மண்டபம் இடிந்து விழுந்து பெண் பலி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்து விழுந்தது. அதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் பல பக்தர்கள் இந்த இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என   என்னப்படுகிறது. இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர் மழை மற்றும் ஒகி புயல் காரணமாக இந்த மண்டபம் வலுவிழந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் தற்போது அங்கு பதற்றம் நிலவுகிறது.