தெலுங்கு விஜய் சேதுபதி

முதன் முறையாக தெலுங்கு தேசத்தில் காலடிஎடுத்து வைக்கிறார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் 151-வது படம் சைரா. இதில், நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இந்தப்படத்தில் அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், ஜெகதி பாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் தோன்றுகின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிமர்மன் ஒளிப்பதிவு செய்ய, சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். ராம்சரண் தயாரிக்கிறார். சுதந்திரப்போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள சைரா படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து விஜய்சேதுபதி நடிக்கிறார். இதுவரை, தமிழில் மட்டுமே நடித்து வந்த விஜய்சேதுபதி சைரா படம் வாயிலாக முதன் முறையாக தெலுங்கு தேசத்துக்கு செல்கிறார். அவர் தமிழில் நடித்த பீட்சா, சூது கவ்வும்,

சமீபத்தில் வந்த விக்ரம் வேதா போன்ற படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில், சிரஞ்சீவியுடன் சேர்ந்து அவரின் 151-வது படமான சைரா படத்தில் விஜய் சேதுபதியும் நடிப்பதால் இந்தப் படத்துக்கு தெலுங்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.