தேசிய விருதுபெற்ற ஐஸ்வர்யா ராஜேசுடன் நடிக்க பதட்டமாக இருந்தது – சிபிராஜ்

சிபிராஜ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘கட்டப்பாவ காணோம்’. அறிமுக இயக்குனர் மணி சேயோன் இயக்கியுள்ள இந்த படத்தில் சாந்தினி தமிழரசன், காளி வெங்கட், மைம் கோபி, யோகி பாபு, லிவிங்ஸ்டன், உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் மணி சேயோன் படம் பற்றி கூறும்போது, இது இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு மீனை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்றார்.

சிபிராஜ் கூறும்போது, இந்த படத்தில் கதாநாயகன், கதாநாயகிக்கு மட்டுமல்ல, இதில் நடித்த அனைவருக்கும் சமமான முக்கியத்துவம் உண்டு . ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு தேசிய விருது பெற்ற நடிகை. எனவே, அவரோடு நடிக்க முதலில் எனக்கு பதட்டமாக இருந்தது.  இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமாக மீன் இருந்தும், கதாநாயகி ஐஸ்வர்யாவுடனும் ரொமான்ஸ் செய்ய வாய்ப்பு கிடைத்தது. முதலில் காதல் காட்சிகளில் நடிக்க தயக்கமாக இருந்தது. ஆனால் அவருடைய சகஜமாக பழக கூடிய குணம், என்னை அந்த பதட்டத்தில் இருந்து வெளியே கொண்டு வந்துவிட்டது என்று தெரிவித்தார்.