ரூ.20 லட்சம் இறந்த மீனவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு

NEE Short Film

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஒக்கி புயல் தாக்கியதில் கடலுக்குள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மீனவர்கள் குடும்பத்தினர் அரசின் போக்கை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறந்த மீனவர்கள் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்குவதாக அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது அதை 20 லட்ச ரூபாயாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மீனவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கிடைக்க ஏற்பாடு செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார்.