ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் தரப்புக்கு நேற்று இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது. எனவே, ஆர்.கே.நகர் தேர்தல் தேதி இன்று அல்லது நாளை வெளியாகலாம் என தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன் படி, இன்று தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் டிசம்பர் 21ஆம் நடத்த போவதாக அறிவித்துள்ளது. டிசம்பர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு டிசம்பர் 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. மேலும், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அட்டவணை கீழே 

வேட்புமனு தாக்கல்: நவம்பர் 27 

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: டிசம்பர் 4 

வேட்புமனு பரிசீலனை: டிசம்பர் 5 

வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்: டிசம்பர் 7 

வாக்குப்பதிவு: டிசம்பர் 21 

வாக்கு எண்ணிக்கை: டிசாம்பர் 24