பரோல் கேட்டு மீண்டும் விண்ணப்பித்தார் சசிகலா

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, இன்று மீண்டும் பரோல் கோரி பெங்களூரு சிறைத் துறையிடம் விண்ணப்பித்துள்ளார். உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள தனது கணவர் நடராஜனை பார்க்க, கடந்த வாரம் 15 நாட்கள் பரோல் கோரியிருந்தார். ஆனால், நேற்று அந்த பரோல் மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், கூடுதல் ஆவணங்களுடன் மீண்டும் 15 நாட்கள் பரோல் கோரி சசிகலா விண்ணப்பித்துள்ளார்.