படப்பிடிப்பில் எஸ்பிபி-க்கு அஞ்சலி செலுத்திய விஜய் ஆண்டனி , ஆனந்த கிருஷ்ணன் மற்றும் படக்குழுவினர்

 

பின்னணி பாடகர் எஸ்பிபி மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் நேரிலும், சமூக வலைதளப் பக்கங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .

விஜய் ஆன்டனி கதாநாயகனாக நடிக்கும் 14 வது படத்தை செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிக்கிறார் .இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். ஆத்மீகா நாயகியாக நடிக்கிறார் .இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க  Dr . தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.  இசை – நிவாஸ்  கே பிரசன்னா.

நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜய் ஆன்டனி , ஆனந்த கிருஷ்ணன் மற்றும் படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் எஸ் பி பி யின் உருவப்படத்திற்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் .