ஊரடங்கு 3-ஆம் கட்ட தளர்வுகள்

நாடு தழுவிய அளவில் அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகளை அளித்து மத்திய அரசு அறிவிப்பு.
 
யோகா, ஜிம் பயிற்சி மையங்களை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திறக்க அனுமதி.
 
தனிநபர்கள் இரவு நேரங்களில் நடமாட விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்.
 
நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆக.31 வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம்.
 
சுதந்திர தினக் கொண்டாட்டம் தனிமனித இடைவெளியுடன் நடைபெற வேண்டும்.
 
திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவைகளுக்கும் தடை நீட்டிப்பு.
 
மெட்ரோ ரயில்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்களுக்கு செயல்பட விதித்த தடை நீட்டிப்பு.
 
ஆக.31 வரை பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை தொடர்கிறது.
 
பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபானக் கூடங்கள், அரங்குகள் செயல்பட விதித்த தடை தொடர்கிறது.
 
மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் தனி நபர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு தடை இல்லை. இ பாஸ் தேவையில்லை