புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நன்றிகள்

 
கஜா புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் வாடும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு  நிவாரண நிதியாக ரூ.5,000/- வீதம் மொத்தம் ரூ.8,60,000/- “தென்னிந்திய நடிகர் சங்கம்’’ மூலம் வழங்கப்பட்டது. 
இவ்வேளையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி சேவை புரியும், நிறுவனங்கள், அமைப்புகள், தன்னார்வலர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் “தென்னிந்திய நடிகர் சங்கம்” நன்றி தெரிவித்து கொள்கிறது.