4 அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.8 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் – பன்னாட்டு அரிமா சங்க அறக்கட்டளை 324 A1 வழங்கியது


பன்னாட்டு அரிமா சங்க அறக்கட்டளை (LCIF) அரிமா மாவட்டம் 324 A1 க்கு வழங்கியுள்ள நிதியைக் கொண்டு சென்னையில் உள்ள முக்கிய 4 அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான சுமார் 8 இலட்சம் ரூபாய் மதிப்பு உள்ள முக கவசம், கையுரை, கிருமி நாசினி, பாதுகாப்பு கவச உடை உள்ளிட்ட பொருட்கள் 15.05.2020 வழங்கப்பட்டன.

அரிமா K. ஜெகனாதன், மாவட்ட ஆளுனர் முன்னிலையில் டாக்டர் மணி மாறன், டாக்டர் எம்.வி.எஸ்.பிரகாஷ், டாக்டர் பாலசுப்பிரமணியம், டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் எஸ்.விஜயா, டாக்டர். வி.பலராமன் ஆகிய அரசு மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டு பெற்றுக் கொண்டனர்.

அரிமா R. சம்பத்,  பன்னாட்டு இயக்குனா், அரிமா N.S. சங்கர், முன்னாள் பன்னாட்டு இயக்குனா், அரிமா P.V. பிரகாஷ் குமார், முதல் துணை நிலை ஆளுநர், அரிமா S.V. மாணிக்கம், இரண்டாம் துணை நிலை ஆளுநர் ஆகியோர் உடனிருந்தனர்.