லஷ்கர்-இ-தொய்பா தளபதி சுட்டுக் கொலை

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் முக்கிய சுட்டுக் கொல்லப்பட்டான்.  புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அயூப் லெல்ஹாரி எனும் தீவிரவாதி கொல்லப்பட்டான். புல்வாமா மாவட்ட லஷ்கர் தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதியாக இவன் செயல்பட்டு வந்தான். அயூபின் மரணம் பாதுகாப்பு பணியினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என காஷ்மீர் டிஜிபி ஷேஷ் பால் வைத் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். தீவிர தேடுதல் வேட்டை, ரோந்து பணிகள் போன்றவை முடுக்கி விடப்பட்டுள்ளன. ஜூலை மாத இறுதியில் இருந்து தற்போது வரை பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 23 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.