கோவில்பட்டி காவல்துறை சார்பில் கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் – விபத்தில்லா நகரமாக உருவாக்க டி.எஸ்.பி. வேண்டுகோள்

கோவில்பட்டி காவல்துறை சார்பில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் அண்ணா பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. டி.எஸ்.பி. ஜெயபராஜ் கலந்து கொண்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் வழங்கி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். புத்தாண்டு வாழ்த்துக்கள் மட்மின்றி இந்தாண்டு கோவில்பட்டி நகரம் விபத்தில்லா நகரமாக மாற பொதுமக்கள் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும், அனைவரும் ஹெல்மேட் அணிய வேண்டும், சாலைபாதுகாப்பு அவசியம், அததை விட மக்களின் உயிர் அவசியம், இந்தாண்டு கோவில்பட்டி நகர மக்கள் விபத்தில்லா வருடமாக கடைபிடிக்க அனைவரும் காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து மக்கள் செயல்பட வேண்டும் என்று டி.எஸ்.பி.ஜெயபராஜ் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் ஆய்வாளர்கள் பவுல்ராஜ், விநாயகம் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.