ஒராண்டுக்குபின் வெளியே வந்தார் கருணாநிதி

சென்னை முரசொலி பவள விழா கண்காட்சியை காண தி.மு.க. தலைவர் கருணாநிதி பார்வையிட்டார். உடல் நலிம் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி கடந்த ஓராண்டாக அவர் வெளியே வராமல் இருந்து வந்தார். இன்று அவர் சக்கர நாற்காலியில் முரசொலி விழா நடக்கும் அரங்கத்திற்கு வந்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலநலக்குறைவால் வீட்டில் ஒய்வெடுத்து வருகிறார். அவரது புகைப்படம் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளது. இதன் மூலம் அவர் நல்ல உடலத்துடன் இருப்பதை வெளிப்படுத்தியது.

இந்நிலையில் சமீபத்தில் முரசொலி பவள விழா மற்றும் கண்காட்சி நடந்தது.

இக்கண்காட்சியை காண சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வருகை தந்தார். கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக எந்த பொது நிகழ்ச்சியிலும் கருணாநிதி பங்கேற்காத நிலையில் இன்று திடீரென முரசொலி நாளிதழ் அலுவலகம் வந்தார். கருணாநிதியுடன் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகளும் வந்தனர்.