இந்தி பட இயக்குனர் குந்தன் ஷா மரணம்

Nayanthara & Sivakarthikeyan in Director Mohan Raja next film

இயக்குனரும் எழுத்தாளருமான குந்தன் ஷா இந்தியில் பல்வேறு தரத்திலான படங்களையும், தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார். அவருடைய சில படங்களுக்கு அவரே எழுத்தாளராகவும் இருந்துள்ளார். 
 1983ல் அவர் இயக்கத்தில் வெளியான சிறந்த நகைச்சுவை திரைப்படமான ‘ஜானே பி டோ யாரோ’ என்ற இந்தி படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. மேலும் ‘கபி கான் கபி நா’ என்ற படத்திற்கு பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான ‘பி சே பிஎம் டக்’ என்பதே அவரது கடைசி படம்.  குந்தன் ஷாவுக்கு 69 வயதாகிய நிலையில் மும்பையில் உள்ள வீட்டில் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மரணமடைந்துள்ளார்.  குந்தன் ஷாவின் மறைவுக்கு பாலிவுட் உலகினர் பலர் ட்விட்டரில் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.