முதல்வரின் தாயார் மறைவிற்கு ஹஜ் தலைவர் நேரில் இரங்கல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயி அம்மாள் (வயது 92) சென்ற வாரம் மாரடைப்பால் காலமானார். அதற்கு சினிமா பிரபலங்கள் முதல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து தனது இரங்கலைத் தெரிவித்தார். அதேபோல், நடிகர் விஜய்சேதுபதியும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர், பிரசிடெண்ட் அபூபக்கர் முதலமைச்சரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தனது இரங்கலைத் தெரிவித்தார். சென்ற வாரமே முதல்வருக்கு இரங்கலைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.