கௌதமி குற்றச்சாட்டு – ராஜ்கமல் நிறுவனம் விளக்கம்

சினிமாவை தாண்டி அரசியலில் முழுமையாக ஈடுபட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். இந்நிலையில் நடிகை கௌதமி விஸ்வரூபம், தசாவதாரம் போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய எனக்கு ராஜ்கமல் நிறுவனம் சம்பள பாக்கி வைத்துள்ளது என குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து ராஜ்கமல் நிறுவனம்  விளக்கம் கூறுகையில், தசாவதாரம் ஆஸ்கர் ரவிச்சந்திரன் அவர்கள் தயாரித்தார் , விஸ்வரூபம் படத் தயாரிப்பு பி.வி.பி சினிமாஸ் நிறுவனர். இந்த படங்களில் கௌதமிக்கு சம்பள பிரச்சனை என்றால் அதற்கு ராஜ்கமல் பிலிம்ஸ் எந்த விதத்தில் பொறுப்பேற்க முடியும். எங்களது நிறுவனம் சார்பில் கௌதமி பணியாற்றிய அனைத்திற்கும் சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது. அப்படி ஏதாவது படத்திற்கு கொடுக்கவில்லை என்று அவர் ஆதாரம் காட்டினால் நாங்கள் பணம் தர தயார் என்று கூறியுள்ளனர்.