ஜி.வி.பிரகாஷ் – ரவிஅரசு கைகோர்க்கும் ‘ஐங்கரன்’

ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள படத்துக்கு ‘ஐங்கரன்’ எனத் தலைப்பிட்டுள்ளார்கள். பிப்ரவரி படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளார்கள். ‘4ஜி’, ‘சர்வம் தாளமயம்’, ‘அடங்காதே’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். மேலும் அவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவிருந்த ‘புரூஸ் லீ’ படமும் வெளியீட்டில் இருந்து பின்வாங்கியுள்ளது. இப்படங்களைத் தொடர்ந்து ‘ஈட்டி’ படத்தின் இயக்குநர் ரவிஅரசு கூறிய கதை பிடித்துவிடவே, தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்தின் பெயர் அடங்கிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். ‘ஐங்கரன்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் நாயகியாக மடோனா செபாஸ்டியன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தை ‘ஆரஞ்சு மிட்டாய்’ மற்றும் ‘றெக்க’ படங்களின் தயாரிப்பாளர் கணேஷ் தயாரிக்கவிருக்கிறார்.