போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை கண்டித்து கோவில்பட்டி தாலூகா அலுவலகம் முன்பு தொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

பழைய பென்சன் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜேக்டோ- ஜீயோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள வருவாய்துறை அலுவலங்களில் பெரும்பால ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அலுவலங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. இதனால் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கோவில்பட்டி தாலூகா அலுவலகம் முன்பு அண்ணாதொழிற்சங்க மாவட்ட இணை செயலாளர் ராமகிருஷ்ணன், ஐ.என்.டி.யூ.சி ராஜசேகர்; தலைமையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை கண்டித்தும், அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மாற்றுப்பணியாளர்களை கொண்டு பணிகள் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.