ஆற்காட்டில் கொடி தின விழிப்புணர்வு ஊர்வலம்

வேலூர் மாவட்டம் ஆற்காடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கொடி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு  ஊர்வலம் நடைபெற்றது.இந்த ஊர்வலத்தினை ஆற்காடு வட்டாட்சியர் சரவணன் கொடி அசைத்து துவக்கி  வைத்தார். இந்த ஊர்வலத்தில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர்  கலந்துக்கொண்டனர்.

நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இந்த ஊர்வலம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.இந்த ஊர்வலத்தில் துணை வட்டாட்சியர்கள் சுரேஷ்,நடராஜன்,வருவாய் ஆய்வாளர் கன்னியப்பன், கிராம நிர்வாக அலுவலர் கலையரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.