தாடி பாலாஜி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

நடிகர் தாடிபாலாஜி மீது அவரது மனைவி நித்யா தன்னை கொடுமை படுத்துவதாகவும், கண்மூடிதனமாக தன்னை அடிப்பதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். இதை தொடர்ந்து ஆணையர் உத்தரவின் பேரில் நித்யாவின் புகார் மாதவரம் போலீசுக்கு மாற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தாடி பாலாஜி மீது, பெண் வன்கொடுமை சட்டம், ஆபாசமாக திட்டுதல், தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக பேசுதல், கொலை மிரட்டல், ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தாக்கியது என 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை தொடர்ந்து தாடி பாலாஜியை காவல்துறை கைதுசெய்ய வாய்ப்பு உள்ளது.