ஜல்லிக்கட்டு மூலம் காளைகளுக்கு தீங்கு நடைபெறுவது இல்லை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை தொடங்கி வைத்தனர்.மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இன்று

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான இந்த ஜல்லிக்கட்டை தமிழக மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்கள் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஜல்லிக்கட்டு விளையாட்டு மூலம் காளைகளுக்கு சிறு தீங்கும் நடைபெறுவது இல்லை. காளை வளர்ப்பவர்கள் குழந்தைகளை நாம் எப்படி பேணி வளர்ப்போமோ அது போல தங்கள் வீட்டு குழந்தை போல வளர்க்கிறார்கள்.வீர விளையாட்டான இந்த ஜல்லிக்கட்டு உலகமே போற்றும் அளவுக்கு சிறக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.