பீரங்கி பயிற்சியாளர் சக்திவேல் மரணம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில், பீரங்கி பயிற்சியாளராக பணியாற்றிவருபவர் சக்திவேல், வயது 37.   20 வருடங்களாக ராணுவத்தில் சேவை செய்யும் சக்திவேல், தேனி மாவட்டம், கடைமலைப்புதூரைச் சேர்ந்தவர். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும் 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் 5 வயதில் ஆண்குழந்தையும் உள்ளனர். 

இவர் வழக்கம் போல் நேற்று ராணுவ வீரர்களுக்கு, பீரங்கியை இயக்குவது குறித்து வகுப்பெடுத்துக்கொண்டிருந்தார். . அப்போது எதிர்பாராத விதமாக பீரங்கி சிலிண்டரில் இருந்த வாயு வெளியேறியுள்ளது. அதை உணர்ந்த அவர்  வெளியேற முயன்றபோது பீரங்கியின் அவசர கால கதவு திறக்கவில்லை. இதையடுத்து மூச்சுத் திணறி சக்திவேல் உயிரிழந்தார்.