அகில இந்திய கராத்தே போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் 2 – வது இடம்

அகில இந்திய பல்கலைக்கழக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா பல் கலைக்கழகத்தில் நடந்தது . 
 
3 நாட்கள் நடந்த இந்த போட்டி யில் பெண்கள் பிரிவில் பார்கத்துல்லா பகல்கலைக்கழக அணி (போபால்) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது . அண்ணா பல்கலைக்கழக அணி (சென்னை) 2 – வது இடத்தை பிடித் தது .
 
ஆண்கள் பிரிவில் பாடலிபுத்ரா பல்கலைக்கழக அணி ( பாட்னா ) முதலிடத்தை பிடித்தது . ஜபுல்புர் பல்கலைக்கழக அணி (மத்தியபிரதேசம்) 2 – வது இடம் பெற்றது . 
 
பரிசளிப்பு விழாவுக்கு சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி வேந்தர் எஸ் . சுந்தர் மனோகரன் தலைமை தாங்கினார் . தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் கராத்தே ஆர். தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .