நடிகர் ஆரி விவசாயி சுந்தரராஜ் குடும்பத்தினருக்கு 25 ஆயிரம் நிதி உதவி

நடிகர் ஆரி மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக விவசாயி சுந்தரராஜ் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி 25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

கஜா புயலில் 5 ஏக்கரில் நடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்ததால் விரக்தியடைந்த தென்னை விவசாயி சுந்தர்ராஜன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் (57). இவர் கடந்த 30 ஆண்டுகளாக 5 ஏக்கரில் தென்னை மரங்களை நட்டு வளர்த்து வந்தார்.

விவசாயி சுந்தரராஜன் குடும்பத்தினரை நேரில் சந்தித்த நடிகர் ஆரி அவர்களுக்கு  ஆறுதல் தெரிவித்து மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக 25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

அதனை பெற்றுக்கொண்ட மனைவி அம்சவள்ளி மகன் சுதாகரன், மகள் சுதா ஆகியோர்

ஆரியின் முன்னிலையில் அவரது மகள் சுதா பட்டதாரியான தனக்கும் ஏரோநாட்டிக்கல் முடித்த தம்பிக்கும் அரசு வேலை வழங்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.