ஏர்.ஆர்.சி சர்வதேச கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் மதுரையில் நவம்பர் 1ஆம் தேதி உதயமாகிறது

 மதுரை மாநகரில் ஏர்.ஆர்.சி சர்வதேச கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் வரும் 1ஆம் தேதி திக்கப்படுகிறது. இது தென் இந்தியாவில் ஒரு சாதனையாக திகழ்கிறது.  செயற்கை கருத்தரிப்பு மையம் சர்வதேச அளவில் IVF, IUI போன்ற செயற்கை கருத்தரிப்பு செய்ய அனைவராலும் அனுகப்படும் நம்பிக்கையான மருத்துவமனையாக எ .ஆர். சி . சர்வதேச கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் விளங்குகிறது. இந்த செயற்கை கருத்தரிப்பின் மூலம்  பல ஆயிரத்திற்கும் மேலான தம்பதிகள் குழந்தை பேறு பெற்று தற்போது மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். 
டாக்டர். லட்சுமணன் சரவணன்  எ .ஆர் .சி. சர்வதேச கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமை நிர்வாகியாக உள்ளார்.  இவர் மருத்துவமனையின் இனப்பெருக்க மற்றும் பாலியல் ஆய்வாளராக திகழ்கிறார். இந்த துறையில் பல சவாலான மலட்டு பிரச்சனைகளையும் சரி செய்து வருகிறார். டாக்டர். திருமதி.மகாலட்சுமிசரவணன்  மருத்துவமனையின் இனப்பெருக்க ஆலோசகராக விளங்குகிறார்.
புதிய மருத்துவமனை திறப்பு  தொடர்பாக எ. ஆர். சி. சர்வதேச கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குனர்  டாக்டர் லட்சுமணன் சரவணன்  மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது,
எங்கள் மருத்துவமனையில், தம்பதிகளில் கணவன் மனைவி என யாருக்கு குறை என்றாலும் முதலில் அவர்களின் பிரச்சனையை கண்டறிந்து அவர்களின் பிரச்சனையை முதலில் அவர்களுக்கு புரிய வைத்து அதற்கான சிகிச்சை பற்றி ஆலோசனை அளித்து அதன் பிறகே முறையான சிகிச்சை வழங்கி அவர்களை குழந்தை பேறு அடைய செய்வதே எங்களின் ஒரே இலக்கு ஆகும். எங்களுக்கு உலக முழுவதும் ஆன்லைன் மூலமாக 2 கோடி மக்கள் பார்வையாளர்களாக இருக்கிறார்கள்.
எங்கள் மருத்துவமனை சென்னையில், எக்மோர், பெரம்பூர், பெருங்குடி, ஆகிய இடங்கிலும், வேலூர், திருச்சி, திருநெல்வேலி, கோவை போன்ற நகரங்களிலும் எங்கள் மருத்துவமனை மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறது. வரும் நவம்பர் 1ஆம் தேதி புதிதாக மதுரை மாநகரில்  21/5c, snp towers, Sivagangai main road, kk Nagar  எங்கள் புதிய கிளையை தொடங்க உள்ளோம்.
இந்த மருத்துவமனை  150 படுக்கைகளுடன் பல்நோக்கு மருத்துவமனையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை திறப்பு ஒரு சாதனையாகவே கூறலாம். ஏன்னென்றால் இந்தியாவிலேயே, தென் இந்திய பகுதியில்  பல்நோக்கு வசதியுடன் கருத்தரிப்பு மருத்துவமனை 8 -வது கிளை திறப்பது ஏ.ஆர்.சி. மருத்துவமனை மட்டும்தான் என்பதை பெருமையுடன் தெரிவிக்கிறேன். 
மதுரை வாழ் மக்கள் மட்டுமல்லாது அதனை சுற்றி உள்ள பகுதி மக்களுக்கும் மிகவும் பயன் உள்ள வகையில் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. எங்கள் சேவையை மதுரை வாழ் மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். 
எங்கள் மருத்துவமனைக்கு தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது. வெளிநாடுகளிலிருந்தும் மருத்துவம் பெற எங்கள் மருத்துவமனைக்கு ஏராளமான தம்பதியகர்கள் வருகிறார்கள்.
சென்னையை தலைமை இடமாக கொண்டு நாங்கள் மருத்துவம் புரிந்தாலும்,  டாட்டா  கன்செல்டிங் நிறுவனத்துடன் இணைந்து  காணொலி காட்சி மூலம் மருத்துவ சிகிச்சை முறையை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.