சென்செக்ஸ் மீண்டும் உயர்வு இந்திய பங்குச்சந்தைகளில்

இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 175 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 33,000 புள்ளிகளை எட்டியது. கடந்த ஐந்து நாள் வர்த்தகத்தில் குறியீடு 801.11 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 175.53 புள்ளிகள் உயர்ந்து 33,008.47 புள்ளிகளாக உள்ளது. ஐடி, டெக் மற்றும் சுகாதாரம் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 57.40 புள்ளிகள் அதிகரித்து 10,179.20 புள்ளிகளாக உள்ளது.
டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டி, பார்தி ஏர்டெல், எச்டிஎஃப்சி, எஸ்.பி.ஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி போன்ற நிறுவன பங்குகள் விலை 2.10% வரை உயர்ந்து காணப்பட்டது.
ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.10% மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் 0.72% உயர்ந்துள்ளபோது ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.20% சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.17% வரை குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது