9-12 ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர மத்திய அரசு நிபந்தனை

செப்.,21 முதல் 9-12 ம்வகுப்பு மாணவர்கள் சுய விருப்பத்தின்படி பள்ளிக்கு வரலாம் என அரசு தெரிவித்து உள்ளது.

அவ்வாறு வரும் மாணவர்கள் பெற்றோர் ஒப்புதல் பெற்ற பிறகே பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம்.

பள்ளியில் 6 அடி தனிமனித இடைவெளியை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும்.

அடிக்கடி கைகளை கழுவவேண்டும். முக கவசம் அணிய வேண்டும்.

பிரார்த்தனை கூட்டம் விளையாட்டு, ஒன்று கூடுதல் போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது.

கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் இருந்து மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதியில்லை.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மன அழுத்தம் போக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.