பிரபல துணிக்கடையில் பணம் திருட்டு

சந்திரசேகர் என்பருக்கு சொந்தமான ஜவுளிக்கடை கிருஷ்ணன்கோவில் சத்திரம் கீழ ரதவீதியில் உள்ளது. நேற்றிரவு கடையில் பணியாற்றி ஊழியர்கள் கடையை அடைத்து விட்டு சென்றனர்.இன்று காலையில் சந்திரசேகர் மற்றும் ஊழியர்கள் கடையை திறக்க வந்து போது கடையின் ஷாட்டர் வளைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஷாட்டரை திறந்து உள்ளே பார்த்த போது கடையின் கல்லாவில் இருந்த 3 ஆயிர ரூபாய் ரொக்க பணம் திருடு போய் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சந்திரசேகர் கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்..கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல்ராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் உள்ள ஜவுளிக்கடையி;ல் நடைபெற்ற இத்திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.