தொண்டர்களின் கோரிக்கையை விஜயகாந்த் பரீசிலிக்க வேண்டம்: தமிழிசை விருப்பம்

தென்காசி: தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று கூட்டணி நிலைப்பாடு குறித்து பரீசிலனை செய்ய வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் தென்காசி சட்டசபை தொகுதிக்குட்பட்ட சுரண்டையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: விஜயகாந்த் தொண்டர்களின் கோரிக்கை ஏற்று கூட்டணியை மறு பரிசீலனை செய்யவேண்டு என்பது எனது விருப்பம், திமுக, அதிமுகவை எதிர்க்க அனைத்து சக்திகளும் ஒன்று திரள வேண்டும் எனத் தெரிவித்தார்.

06-1459890818-tamilisai