தனி டிவி, நாளிதழ்; உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக உத்தரவு அ.தி.மு.க

இன்று அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்களாக இன்று 12 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 12 பேரைத்தவிர வேறு யாரும் ஊடகங்களுக்கு விளக்கமளிக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, அ.தி.மு.கவுக்கு தனி டிவி மற்றும் நாளிதழ் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே பல மாதங்களாக கட்சியில் இதுகுறித்து பேச்சு வார்த்தை நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று கூட்டத்தில் பேசிய ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அ.தி.மு.கவின் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த தனியாக டிவி சேனல் மற்றும் நாளிதழ் தொடங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. எனவே எம்.எல்.ஏக்கள் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை தொடங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.