ஆர்.கே. நகர் தேர்தலில் 68.71% வாக்குகள்

இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்துள்ளது. வாக்குப்பதிவு நேரம் முடியும் தருவாயிலும் ஏராளமான மக்கள் வாக்களிக்க காத்துக்கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து ஒரு சில வாக்குச்சாவடிகளில் இயந்திர பழுது காரணமாக பல மணி நேரங்கள் வாக்குப்பதிவு நடைபெறவில்லை, எனவே வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என மக்கள் கூறி வருகின்றனர். ஆனால் 5 மணிக்கு முன்னதாக வந்து வாக்களிக்க காத்திருப்பவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். 5 மணிக்கு மேல் வாக்களிக்க வந்தவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.  மேலும் வாக்குப்பதிவு முடிவடைந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெறுகிறது. இன்று மாலை 4 மணி நிலவரப்படி, ஆர்.கே. நகர் தேர்தலில் 68.71% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.